ஆனி உத்தரம்

Inuvil kanthan

ஆனி உத்தரம்

உலகெங்கிலும் வாழும் இந்துப் பெரு மக்களுக்கெல்லாம் மூலப்பரம்பொருளாக இருந்து இந்த உலகை யும் மக்களையும் காத்து வருகின்ற சிவ னுக்குகந்த நாட்களில் ஒன்றாக ஆனி உத்தரம், ஆனி திரு மஞ்சணம் மற்றும் நடேசரபிஷேகம் தரிசனம் என்பன அமையப்பெற்ற ஒரு நன்னாள் ஆகும்.

ஒரு வருடத்தில் சிவபெருமானுக்கு 6 நாட்கள் மிக சிறப்பு வாய்ந்த நாட்களாக, அதாவது அபிஷேகத்திற்கும் சிவதரிச னத்திற்கும் உகந்த நாட்களாக சொல்லப் படுகின்றன.

இதில் ஆனி மாதம் ஷஷ்டி திதியும் சேர்ந்த ஆனி உத்தர தரிசனம் மிக சிறப்பு வாய்ந்தது என ஆகமங்களில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது. முருகன் அலங்காரப் பிரியன் என்பது போல் சிவன் அபிஷேகப் பிரியன் ஆவார்.

நாம் சிவபெருமானது திருவருளைப்பெற அவரது மனம் குளிரத்தக்கதாக அபிஷே கங்களை சிவாலயங்களில் செய்ய வேண் டும். இவற்றுடன் வருடத்தில் சிவனுக்கு அபிஷேக தினங்களாகவும் தரிசன காட்சியாகவும் உள்ள தினங்களில் தவறாது அதிகாலை சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்யவேண்டும். இதனால் இப்பூவுலகில் கிடைத்தற்கரிய சகல பாக்கியங்களையும் பெற்று இன்புற்று வாழலாம் என புராணங்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன.

Share this post